Showing posts with label தீர்ந்தது தமிழர்களின் கவலைகள். Show all posts
Showing posts with label தீர்ந்தது தமிழர்களின் கவலைகள். Show all posts

Saturday, January 12, 2008

தை மாதம் 1ம் தேதி தான் இனி தமிழ் புத்தாண்டாக இருக்கும். தமிழக முதல்வர் அறிவிப்பு: ஐயா முதல்வர் அவர்களே, இதுதான் தமிழர்களின் பெரிய கவலையாக இருந்தது. சட்டம் போட்டு இதை மாற்றி விட்டால் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும். பசி பட்டினி எல்லாம் மாயமாக மறந்து விடும் மிகவும் நன்றி.
நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க, இவருக்குக் கிடைத்தது பார் ஒரு அருமையான யோசனை.



ஐயா, கலைஞர் அவர்களே, எந்த நாள் தமிழ் புத்தாண்டாக இருந்தாலும், ஏழை மக்களுக்கு என்ன வந்தது? அதெல்லாம் உங்களைப் போல ஆயிரம் கோடிகளைச் சேர்த்து வைத்திருக்கும் "சாமானியர்"களுக்குத்தானே தவிர எங்களைப்போல அன்றாடம் உழைத்தால்தான் சோறு என்றிருக்கும் பணக்காரர்களுக்கு இல்லை. வாழ்க கழகம் sorry குடும்பம். (கழகம் ஒரு குடும்பம் என்று சொல்வதன் அர்த்தம் கழகம் "ஒரு குடும்பம்" மட்டும் தானா?)