Tuesday, February 5, 2008

விவசாயிகள் தற்கொலையும் அமைச்சரின் அவசரமும்

கேள்வி விவசாயிகளின் தற்கொலை அதிகமாயுள்ளதே?

பதில் இந்தியாவில் கடந்த பத்து, இருபது, நாற்பது ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் விவசாயிகளும் அடக்கம்

கேள்வி ஆனால் தற்கொலை விகிதம் பொதுவாக 18% அதிகரித்துள்ள வேளையில், விவசாயிகளின் தற்கொலை விகிதம் 27% அதிகரித்துள்ளதே?

பதில் நீங்கள் எங்கிருந்து இந்தப் புள்ளி விவரங்களை எடுத்தீர்களோ தெரியாது. நான் மாநில அரசாங்கம் தரும் புள்ளி விவரங்களைத்தான் நம்புகிறேன்.

கேள்வி விவசாயிகளின் துயர்தீர்க்க கடன் தள்ளுபடி மற்றும் புதிய கடன் வழங்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா?

பதில் நாங்கள் பல மட்டங்களில் இது பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

கேள்வி இது எப்போது சாத்தியமாகும்?

பதில் கால அளவை இப்போது கூற முடியாது

கேள்வி பட்ஜெட்டில் இது பற்றி அறிவிப்பு வெளியாகுமா?



பதில் பட்ஜெட் பற்றி நான் கூற முடியாது. இது நிதி அமைச்சர் மற்றும் பிரதம மந்திரியால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்றும் நான் கூற முடியாது.


"இண்டியா டுநைட்" நிகழ்ச்சியில் கரண் தாப்பரின் கேள்விகளுக்கு மத்திய விவசாய மந்திரி திரு சரத் பவார் பதில்/


ஹர்பஜன் சிங் மீது விளையாடத் தடை என்றதும் சீறி எழுந்து உடனே அதிரடி நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிர சிங்கத்தால் லட்சக் கணக்கான விவசாயிகள் தனது சொந்த மாநிலத்தில் தற்கொலை செய்து கொள்வதை அறிந்தும் பேச்சு வார்த்தை மட்டும் தொடர்கிறது பல மட்டங்களில்.

ஐயா, சாகட்டும் விவசாயிகள். அவர்களால் உங்களுக்கு ஓட்டு மட்டும் தானே கிடைக்கிறது. கிரிக்கெட்டினால் எத்தனை கோடிகள் கிடைகிறது. இதை வைத்துக் கொண்டு ஓட்டு வாங்க முடியாதா என்ன?





ஒன்று மட்டும் நிச்சயம். ஏழை அழுத கண்ணீர் வீண் போகாது.

No comments: