Saturday, January 12, 2008

காமராஜர் அரங்கத்தில் மோடி பேசலாமா? காங்கிரஸ் கட்சி புலம்பல்: சாணக்யன் பேசுகிறார். காங்கிரஸ்காரர்களே, இது மக்களாட்சி. மக்கள் விரும்புபிறவர்கள்தான் நாடாள வேண்டுமே தவிர, நீங்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற குடும்பம்தான் நாடாள வேண்டும் என்று நினைத்தால் நடக்காது.
நரேந்திர மோடி மக்களால் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். அவரை அவமதிப்பது, அவரைத் தேர்ந்தெடுத்த கோடிக் கணக்கான மக்களையும் அவமதிப்பது போலாகும். ஏற்கனவே குஜராத்தில் வாங்கிய அடி போதாதா? மறுபடியும் குஜராத்திகளை அவமதித்து, வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா?
அரசியல் என்பது 10, ஜன்பத் சாலை என்ற அரண்மனையோடு முடிந்து விடுவதாக நினைத்துக் கொண்டிருப்பதை முதலில் மாற்றுங்கள். கழுதை ஏற்கனவே கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி விட்டது. இதிலும் தேய்ந்தால், என்ன ஆகும்?

No comments: