Monday, January 21, 2008

வின்னர் வடிவேலு காமெடி

வின்ன்ர் வடிவேலு காமெடியைச் ச்ற்று ஞாபகப்படுத்திக் கொள்ளவும். இப்போது வடிவேலு இருந்த இடத்தில் திரு.பிரகாஷ் கரத், கேபிடலிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (முன்னாள் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா) மற்றும் ரியாஸ் கான் இருந்த இடத்தில் திரு.மன்மோகன் சிங், எதற்கு பிரதம மந்திரி ஆக இருக்கிறோம் என்றே தெரியாத ஒரு பி.ம்.


கரட்.(வடிவேலு): எவண்டா பெட்ரோல், டீசல் விலையை ஏத்துவேன் என்று சொன்னது?

சிங்(ரியாஸ் கான்): சரியா காதில் விழவில்லை, பார்லிமெண்டில் வந்து சொல்லு.

கரட்: நாங்க என்னிக்குமே பார்லிமெண்டிலே பிரச்சினை பண்ண மாட்டோம், எதுவாயிருந்தாலும் ரோட்டோட முடிச்சுக்குவோம், நாங்க இருக்கும் வரைக்கும் விலையை ஏத்த விட மாட்டோம்


சிங்: போன வருஷம் தானே நாலு முறை விலையை ஏத்தினோம்

கரட்: அது போன வருஷம்; நான் சொன்னது இந்த வருஷம்

சிங்: ஏத்தினா?

கரட்: மன்மோகன் சிங், நீ மட்டும் உண்மையான பிரதம மந்திரிஆக இருந்தா விலையை ஏத்திப் பாரு.

(மன்மோகன் சிங் விலையை ஏற்றுகிறார்)

கரட்: ஒத்துக்கிறேன், நீ ஒரு பிரதம மந்திரிதான்னு ஒத்துக்கிறேன், மறுபடியும் அடுத்த விலையேற்றத்திலே சந்திப்போம்.



------------------------------------------------------------------------------

பின் குறிப்பு 1: நண்பர்களே, நாம்தான் உண்மையிலேயே காமெடியன் ஆக்கப் பட்டோம். விலை ஏறத்தான் போகிறது. எவ்வளவு விலை ஏறினாலும், நாம் பெட்ரொல் போடாமல் இருக்க முடியாது.


பின் குறிப்பு 2: எதற்கும் பத்து ரூபாய் நோட்டுக்களாக சில்லறை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, காப்பிடலிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (மெக்டொனல்ட்ஸ்) போராட்டம் நடத்த உண்டி குலுக்கி வருவார்கள். தாராளமாக உதவுங்கள்.

Long live Capitalism. Long live McDonalds.

No comments: